Home | Transcriptions of Videos

வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறை எப்படி பயனுள்ளதாக இருக்கும்?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இந்த eecp சிகிச்சை முறையானது இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதற்கான ஒரு சிகிச்சை முறையாகும். இப்பொழுது ஒரு அறுவை சிகிச்சை மற்றும் அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை முறை இல்லாமல் இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையில் (eecp) சிகிச்சை முறை ஒரு முதன்மை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிகப்படுத்த முடியும். இந்த அதிகப்படுத்தப்பட்ட ரத்த ஓட்டத்தை ஒரு ஆன்ஜியோகிராமோ, அல்லது  (nuclear scan) பரிசோதனையின் மூலமே எவ்வளவு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும் என்பதை அறிந்துகொள்ளலாம்.மேலும் இப்பொழுது இதய நோய்க்கு கொடுக்கக்கூடிய சிகிச்சை முறைகளில் அதாவது அறுவை சிகிச்சை, அஞ்சியோபிளாஸ்ட்டி, EECP மற்றும் மருந்து மாத்திரைகள் (medical management) இந்த முறைகளில் EECP சிகிச்சை முறையானது ஒரு அறுவை சிகிச்சை மற்றும் அஞ்சியோபிளாஸ்ட்டி இல்லாமல் ஒரு நோயாளி இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் இந்த EECP சிகிச்சை முறைதான் உலகெங்கிலும் உள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை ஆகும்.