Home | Transcriptions of Videos

Non Surgical EECP: DD Pothigai/Athi Naveena Maruthuvam/15th April 2018 Part 1

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இதய நோய் (coronary artery diseases)  என்றால் என்ன ?

   ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறக்கும் வரை இதயமானது துடித்துக் கொண்டே இருக்கும். இருதயம் வேலைச் செய்வதற்கு இரத்த நாளங்கள் தேவைப்படுகிறது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை தருவது(coronary artery) என்கிறோம். இந்த செயல் முறை சரி வர இல்லாவிட்டால் ஒரு மனிதனின் சாதாரணமாக செய்ய வேண்டிய காரியங்கள் தடைப்படும். சில சமயங்களில் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் போது,அந்த  அடைப்பைத் தாண்டி இரத்தம் செல்வது கடினமாகிறது. அப்பொழுது என்ன நடக்கும் என்றால்?,இதயத்தில் அடைப்பு ஏற்பட்ட ஒரு மனிதரால் அவரவர் விருப்பத்திற்கேற்ற வேலைகளை செய்து கொள்ள இயலாமல் போகிறது. இருதய நோயாளிகள் உணர்ச்சிபூர்வமாக பேசினாலோ, நடந்தாலோ வலி அதிகம் இருக்கின்றது என்கிறார்கள்.

(Angina) அதவாது நெஞ்சுவலி என்கின்றோம். இது இருதய இரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்று உணர்த்துவதுதான் நெஞ்சுவலி என்கின்றோம். ஒருவர் நெஞ்சுவலி என்று மருத்துவமனைக்கு செல்கிறார். மருத்துவர் அதை உறுதிச்செய்வதற்கு சில மருத்துவப் பரிசோதனைகளை எடுக்க சொல்கின்றார். அதாவது (ECG, ECHO ,TMT) போன்ற பரிசோதனைகளை செய்தப் பின்பு இரத்த குழாயில் அடைப்பு உள்ளது என்பதை மருத்துவர் அறிந்து கொள்கிறார். அதற்கு பிறகு மருத்துவர் பரிந்துரைப்படி நோயாளி மருந்துகளை உட்கொள்கின்றனர். சில நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் கொடுத்தாலும் நெஞ்சுவலி குணமடைவதில்லை,மீண்டும் மருத்துவர் ஆலோசனையின்படி ஆன்ஜியோக்ராம் செய்கின்றார்கள். இதன் மூலம் இரத்த நாளங்களில் அடைப்பு இருக்கின்றதா என்பதை உறுதிச் செய்துக்கொள்கிறார்கள் அடைப்பு ஒரு இடத்திலேயே அல்லது இரண்டு இடத்திலேயே இருந்திருந்தால் (bypass surgery or angioplasty) செய்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் அறுவைச் சிகிச்சை தற்காலிகமாக உங்கள் இருதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்த முடியும். இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதை சரிசெய்ய முடிவதில்லை. அதுதான்(cordiac diseases) அதிகமாக (bypass surgery) மற்றும் (angioplasty) செய்து முடித்த பிறகும் நெஞ்சுவலி ஏற்படுகிறது.

நெஞ்சுவலியை சரிசெய்யும் வகையில் புதிதாக ஒரு சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை EECP  என்று அழைக்கப்படுகின்றது.(enhanced external counter pulsation) அதாவது அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த ஓட்டத்தைச் சரி செய்கிறது.அஞ்சியோபிளாஸ்ட்டி மற்றும் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலம் என்ன பயன் அடைகின்றோமோ அந்த பயனை அறுவைச் சிகிச்சை இன்றி பெற்றுக் கொள்ள முடியும் EECP சிகிச்சையின் மூலம் சரிவர செய்துக்க கொள்ள முடியும்.

இந்த சிகிச்சை (USA)அமெரிக்கா மேலும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது இப்பொழுது இந்தியாவிலும் தமிழகத்திலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு எளிதில் EECP சிகிச்சை கிடைக்க பெரும் வகையில் வழி வகைகள்  செய்யப்பட்டுள்ளன. EECP அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. EECP  சிகிச்சை செய்வதற்கு no hospitalization,no surgery,no blood loss இந்த சிகிச்சை முறையைச் செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்க தேவையில்லை.EECP சிகிச்சை 35 நாட்கள் கொடுக்கப்படும். இந்த EECP சிகிச்சை எப்படி நடைபெறுகின்றது என்பதை கீழே காண்போம். EEECP சிகிச்சை கால்களில் இருக்கும் இரத்த நாளங்களின் வழியாக pumping மூலம் இதயத்திற்கு இரத்தத்தை சீராக அனுப்புகிறது. இருதய பிரச்னை உள்ள ஒரு மனிதனுக்கு சீராக இருதயத்திற்க்கு இரத்த ஓட்டம் சரியாக செல்வதில்லை,அதனால் தான் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய கோளாறு ஏற்படுகின்றது. இந்த EECP சிகிச்சையின் மூலம் கால்களில் இருக்கும் இரத்தத்தை சீராக இருதயத்திற்கு அனுப்பப்படுவதால் இந்த நோய் குணமடைகிறது. நோயாளியின் இரத்த ஓட்டத்திற்கு ஏற்றவாறு இந்த pump அமையும். EECP சிகிச்சை கொண்டிருக்கும் பொழுது நோயாளியின் இரத்த ஓட்டம்,இருதய துடிப்பு இவற்றை கண்காணித்துக் கொள்வோம், இந்த EECP சிகிச்சை 35 நாட்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் செய்யப் படுகிறது இப்படி செய்யப்படும் பொழுது இருதயத்திற்குள் புதிதாக இரத்த நாளங்கள் உருவாகிறது இந்த EECP சிகிச்சை செய்வதன் மூலமாக நெஞ்சுவலி, மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமாகும் இந்த அறிகுறி 15 நாட்களுக்குள் தெரிந்துவிடும்.EECP சிகிச்சை 35 நாட்கள் முடித்தவுடன் சர்க்கரை நோய் ,இரத்த அழுத்தம் போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த சிகிச்சை அதிக ஆண்டுகள் பயனுள்ளதாக உள்ளது EECP சிகிச்சை வலி இல்லாமல் கொடுக்கப்படுகிறது.இந்த சிகிச்சைக்கு முன்பு புகைபிடித்தல், குடிப்பழக்கம் போன்ற பழக்கங்கள் இருந்தால் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். EECP சிகிச்சைக்கு பின் நடைப்பயிற்சி மேலும் சில உணவு பழக்கங்களாலும் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இருதய நோயாளியின் நிலையை இங்கு காண்போம். 64 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருதய நோய் உள்ள நிலையில் இந்த EECP சிகிச்சையை எடுத்துக்கொண்டார்.இவருக்கு இருதய குழாயில் அடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறும் உள்ளது. ஒரு வருடத்தில் இரண்டு முறை இருதய வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இவருக்கு உறங்கும் நிலையிலும் மூச்சு வாங்குதல் அதிகமாக இருக்கும்.மேலும் இரண்டு நிமிடம் வரை தொடர்ந்து இவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . இப்பொழுது இவருக்கு இ.இ.சி.பி சிகிச்சை 32 நாட்கள் முடிந்த நிலையில் இவருக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை அந்த நோயாளி கூறியிருக்கிறார். இரண்டு நிமிடம் கூட நடக்க முடியாத இவருக்கு 15 நிமிடங்கள் வரை நடக்க முடிகிறது.சிகிச்சைக்கு முன் இரவில் தூக்கம் வராத நிலையில்  இருந்தார்.இச்சிகிச்சைக்கு பின் இரவில் நல்ல உறக்கம் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் நன்கு பசி இருக்கிறது என்று கூறுகின்றார். சிகிச்சைக்கு முன் இருதயத்திற்கு இரத்த ஓட்டம் செல்வது மிகவும் குறைவாக இருந்தது EECP சிகிச்சையின் மூலம் இருதயத்தின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளோம். இவருக்கும் ECHO அதாவது இதயத்தின் செயல்திறனை அறிந்துக்கொள்ள இந்த முறை பயன்படுகிறது இருதயத்தின் pumping function மிகவும் குறைவாக இருந்தது. இவருக்கு உடலில் வெவ்வேறு பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது . நுரையீரல் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் உறங்கும் நிலையில் கூட மூச்சு வாங்குதல் அதிகமாக இருக்கிறது, வயிற்றிலும் நீர் சேர்ந்து இருந்ததால் பசியின்மை,கை, கால்  வீக்கம் அனைத்தும் ஏற்பட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் மற்றவர்களின் உதவி இல்லாமல் தனியாக நடக்க முடிகிறது மேலும் பசியின்மையும் நீங்கி உணவுகளை உன்ன முடிகிறது.கை கால்களில் வீக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. இ.இ.சி.பி சிகிச்சைக்கு பின் 35 நாட்கள் முடிந்த நிலையில் மீண்டும் ஒரு முறை ECHO  எனப்படும் பரிசோதனை எடுக்கப்பட்டு இருதயத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும். இருதயத்தின் செயல்திறன் முன் இருந்ததை காட்டிலும் இப்பொழுது நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது என்பதை இந்த பரிசோதனையின் மூல அறிந்து கொள்ளலாம்.

இந்த EECP சிகிச்சையின் மூலம் ஒரு இருதய நோயாளி தனது வாழ்க்கையை(quality of life) மேம்படுத்திக் கொள்ள முடியும். மேலும் சிகிச்சைக்கு பின் மருந்து மாத்திரைகள் குறைக்கப்பட்டு ஒரு சில பயிற்சிகளும் அளிக்கப்படும். அதிக எடையுள்ள ஒருவர் இருதய நோயாளியாக இருந்தால் இவருக்கு இ.இ.சி.பி சிகிச்சை கொடுக்கும் பொது உடல் எடை 5 கிலோ வரைக் குறையும் மேலும் இருதய நோயும் விரைவில் குணமடையும். இ.இ.சி.பி சிகிச்சை அளிக்கப்படும் போது செவிலியர்கள் பயிற்சிப் பெற்ற உதவியாளர்கள் மிகவும் கனிவான கவனத்துடன் நோயாளியாகிய என்னை அன்புடன் கவனித்துக் கொள்வார்கள். மருத்துவர்களும் அவ்வபோது கவனித்துவிட்டு உடல் நிலையை அறிந்துக் கொள்வார்கள் மருத்துவர் ஆலோசனையின் படி இ.இ.சி.பி  யில் சிகிச்சைக் கொடுக்கப்படும். பணியாளர்கள் அன்புடன் ஆதரிப்பார்கள் அவர்களிடத்தில் நமக்கு வேண்டியதை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் அதிகமாக மூச்சு வாங்கும் நிலையில் என்னால் பேசுவதற்கு கூட முடியாமல் இருந்தது.நான் செய்துக் கொண்ட இடத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் அன்போடு என்னை அனைவரும் கவனித்துக் கொண்டனர் நான் அங்கு என் வீட்டில் இருப்பது போல் சௌகரியமாக உணர்ந்தேன்,சிகிச்சைக்கு பின் என்னால் நன்கு பேச முடிகிறது.வேகமாகவும் ஒரு சில வேலைகளையும் செய்துக் கொள்ள முடிகிறது.

அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இந்த EECP சிகிச்சை சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு எளிய முறையில்மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற முறையை  அறிமுகப்படுத்தியுள்ளது.வருட வருமானம் 72,000 கீழ் உள்ள மக்களுக்கு இந்த செயல் திட்டம் மிகவும்  பயனுள்ளதாக இருக்கிறது.என்பதை மகிழ்ச்சி உடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை அனைவருக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தமிழக அரசு இ.இ.சி.பி சிகிச்சையை 12 மருத்துவமனைகளில் செய்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அதாவது சென்னையில் இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை,ஓமந்தூரார் multi-speciality மருத்துவமனை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,இராயப்பேட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,வேலூர் அரசு பொது மருத்துவமனை,தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனை,திருச்சி,கோயம்பத்தூர்,திருநெல்வேலி,மதுரை,கன்னியாகுமரி மற்றும் செங்கல்ப்பட்டு அரசுபொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த EECP சிகிச்சை(HEAL YOUR HEART)மூலம் நிறுவப்பட்டுள்ளது. ஏழை மக்கள் எவ்வித பணம் செலவின்றி இந்த  சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவழி செய்யப்பட்டுள்ளது ஆங்காங்கே அருகில் உள்ள மக்கள் அவரவர்  அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இ.இ.சி.பி சிகிச்சையை எளிதில்  பெற்றுக் கொள்ள முடியும்.

(ex)  திருநெல்வேலியில் உள்ள மக்கள் திருநெல்வேலி அரசுப் பொதுமருத்துவமனையை அணுகி இ.இ.சி.பி சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம் மேலும் சென்னையில் அதிக இடங்களில் இந்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள முடியும். நீலாங்கரை,அண்ணாநகர்,போன்ற இடங்களில் இச்சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம் . நாம் எங்கு சிகிச்சைப் பெற்றுக் கொண்டாலும் சென்னையில் உள்ள இதய மருத்துவர் பரிசோதித்தபின் மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்படும்.இவை அனைத்தும் HEAL YOUR HEART என்னும் ஸ்தாபனம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொழுது நல்ல முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும்.

நன்றி